
மல்லாரி எனும் பாரம்பரிய இசை வடிவத்திற்கு கம்பீர நாட்டையில் அழகுடன் நாகஸ்வரமும், தவிலும் இணைந்து கொடுத்து சிறப்பித்தனர். அடுத்து ஹம்சத்வனி ராகத்தில் நடேச கவுத்துவம் நடன வடிவத்தைக் கொடுத்து நடராஜனுக்கு நடன அஞ்சலி செய்தார். அடுத்து உலகம் புகழும் நாட்டிய கலையே என்ற தண்டாயுதபாணி பிள்ளையின் அருமையான சாகித்யத்திற்கு, தனது நடனத்தை குருவின் ஜதி அமைப்பிற்கு ஆடி சிறப்பித்தார்.
அன்னமய்யாவின் ஸ்ரீமன் நாராயணா என்ற அற்புதமான சாகித்யம். மாதங்களில் நான் மார்கழியாக உள்ளேன் என்ற பரந்தாமனின் பாதமலரை தொட்டு தன் நடனத்தை கொடுத்தார்.
அடுத்து, ஆடல் கலையை வகுத்த நடராஜனுக்கு அர்ப்பணமாக மிக பிரபலமான பாடலான "போசம்போ' ரேவதி ராக பாடல் அதைத் தொடர்ந்து "சின்னஞ்சிறு கிளியே' சுப்பிரமண்ய பாரதியின் கனவு குழந்தை கண்ணம்மாவை சாரதா தொட்டு உச்சிமுகர்ந்து கொடுத்தார். அடுத்து நிறைவாக பழைய பாணி பாடல் "நாதர் முடிமேலிருக்கும் நாக பாம்பே' என்று சாரதாவின் சில் போன்ற உடல் வில் போன்று பாம்பு நடனத்திற்கு ஏற்றவாறு கொடுத்தார். மிகவும் சிறப்பாக நடன நிகழ்ச்சி இருந்தது.